புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கவுதம் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனிடையே விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த கவுதமின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை கவுதமின் உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-hit-by-government-bus-in-pudukkottai-relatives-stage-road-blockade



