குன்னூர் தென் மாநில அளவில் நடைபெற்ற, 29வது வார தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வர்த்தகம் வளர்ச்சியை கண்டு உள்ளது. குன்னுார், டீசர்வ், கோவை, கொச்சி என நான்கு தேயிலை ஏல மையங்களில் வாரந்தோறும் இரு நாட்கள் ஏலம் நடக்கிறது. வருவாய் உயர்வு தென் மாநில அளவில் நடந்த 29வது ஏலத்தில், 47.02 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்த நிலையில், 41.69 லட்சம் கிலோ விற்று, ரூ.52.96 கோடி வருவாய் கிடைத்தது. கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில் 43.65 லட்சம் கிலோவந்ததில், 32.95 லட்சம் கிலோ விற்பனையாகி, ரூ.36.31 கோடி மொத்த வருவாய் கிடைத்தது. இதை ஒப்பிடுகையில், நடப்பாண்டு ரூ.16.65 கோடி வருவாய் உயர்ந்துள்ளது. அபார வளர்ச்சி குன்னுார் ஏல மையத்தில் விற்பனையும், சராசரி விலையும் அதிகரித்து அபார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கொச்சி மற்றும் கோவை மையங்களும் விற்பனையளவில் வளர்ச்சியை எட்டின. ‘டீசர்வ்’ மையம் மட்டும் விற்பனை வருவாயில் கடந்த ஆண்டை விட சற்று சரிவை சந்தித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-in-tea-sales-rs-53-crore-revenue-in-southern-state-auction




