புதுடெல்லி நாடாளுமன்ற மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். மசோதா நிறைவேற்றம் இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. இதனால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2 மணிக்கு அவை கூடியது. இந்த நிலையில், மக்களவையில் இன்று சில மசோதாக்கள் நிறைவேறின. இதன்படி, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் வளர்ச்சி சட்டத்தினை திருத்தம் செய்வதற்கான மசோதா இன்று பிற்பகல் நிறைவேற்றப்பட்டது. எந்தவித விவாதமும் இன்றி இந்த மசோதா நிறைவேறியது. எப்.சி.ஆர்.ஏ. மசோதா எனினும், சர்ச்சைக்குரிய, எப்.சி.ஆர்.ஏ. மசோதா நிறைவேறாமல் உள்ளது. கடந்த மார்ச் 25-ல் மக்களவையில் இந்த மசோதா தாக்கலானது. அது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் தற்போது உள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், எப்.சி.ஆர்.ஏ. மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு முன் இன்று காலை அவை கூடியபோது, காங்கிரஸ் தேசிய தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே, மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து, எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதில் அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு இந்த மசோதாவின் நோக்கம் சிறுபான்மையினரை ஒடுக்குவது என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை வெளிப்படுத்தின. அரசு தன்னுடைய சொந்த நலனிற்காக இதனை கொண்டு வர முயற்சிக்கின்றன என்று கூறியுள்ளன. இந்நிலையில், நீட் விவகாரத்தில் மாணவர் போராட்டம் தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று கூறினார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/lok-sabha-adjourned-till-11-am-tomorrow-2




