செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், ChatGPT அறிமுகமாகி Generative AI உலகளவில் பெரும் கவனம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 'Text மட்டும் பயன்படுத்தி தொழில்முறை தரத்தில் வீடியோக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் எதிர்காலம்' என்ற நம்பிக்கையுடன் தனது தொழில்முனைவு பயணத்தைத் தொடங்கியவர் விக்டர் ரிபார்பெல்லி. ஆனால், அவரது கனவை முதலீட்டாளர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. AI மூலம் வீடியோக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அப்போது மிகவும் புதியதாக இருந்ததால், அதற்கான சந்தை உருவாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. AI | ஏ.ஐ 'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம் இதன் விளைவாக, முதலீடு திரட்ட முயன்றபோது 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அவரது யோசனையை நிராகரித்தனர். எனினும், அந்த தொடர் மறுப்புகள் ரிபார்பெல்லியின் நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. 2017-ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட Synthesia, Text அடிப்படையாகக் கொண்டு AI அவதார்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கத் தொடங்கியது. அப்போது Generative AI என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படாத ஒரு துறையாகவே இருந்தது. தொடக்கத்தில் பல்வேறு பயன்பாடுகளை ஆராய்ந்த நிறுவனம், பின்னர் தனது கவனத்தை நிறுவனங்களுக்கான சேவைகளில் முழுமையாகத் திருப்பியது. குறிப்பாக, ஊழியர் பயிற்சி, புதிய பணியாளர்களுக்கான அறிமுக வீடியோக்கள், உள்துறை தகவல் தொடர்பு உள்ளிட்ட தேவைகளுக்காக AI வீடியோக்களை உருவாக்கும் சேவையில் கவனம் செலுத்தியது. அந்த வணிக முடிவே நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்று கேமரா, நடிகர்கள் அல்லது பெரிய படப்பிடிப்பு குழு இல்லாமலேயே, AI அவதார்களைப் பயன்படுத்தி தொழில்முறை தரத்தில் வீடியோக்களை உருவாக்கும் வசதியை உலகம் முழுவதும் 70,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். ஏ.ஐ (AI) 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற புதிய முதலீட்டு சுற்றின் மூலம் Synthesia $4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹38,000 கோடி) மதிப்பீட்டை எட்டியது. இதன் மூலம், ஐரோப்பாவின் முன்னணி AI ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக Synthesia தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில், ஆரம்பகால ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது சில பங்குகளை விற்று லாபம் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. தனது பயணம் குறித்து விக்டர் ரிபார்பெல்லி கூறுகையில், புதிய மற்றும் துணிச்சலான யோசனைகள் ஆரம்பத்தில் பலருக்கும் புரியாமல் போகலாம் என்றும், அதனால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிப்பதே ஒரு தொழில்முனைவோரின் மிகப்பெரிய பலம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் மறுப்பில் தொடங்கிய ஒரு கனவு. இன்று ₹38,000 கோடி மதிப்பிலான AI நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. ஒரு புதிய யோசனையில் உறுதியாக நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பயணித்தால், ஆரம்பகால மறுப்புகள்கூட எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக மாறலாம் என்பதை சிந்தேசியாவின் வெற்றிக்கதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/technology/rejected-by-100-investors-synthesia-founder-builds-4b-ai-giant




