ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் பதா கிராமத்தின் கொயனா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி அதை கடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. 3 பேர் பலி இந்நிலையில், பதா கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று மாலை ஆற்றை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் நீரில் அளவு திடீரென அதிகரித்தது. இதில் அடுத்து செல்லப்பட்ட 3 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை. அதை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/tragedy-in-jharkhand-three-drown-in-river




