மதுரை, மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி- நிலுவையில் உள்ள வழக்கு மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). 'சப்பாணி சரவணன்' என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். சப்பாணி சரவணன் டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு சரவணன் வந்துள்ளார். வெட்டிக்கொலை அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட ஆயுதமேந்திய மர்ம கும்பல், திடீரென சரவணனை நோக்கிப் பாய்ந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க சரவணன் நடுரோட்டில் அலறியபடி ஓடியுள்ளார். எனினும், விடாமல் துரத்திய அந்த கும்பல், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே அவரை ஓட ஓட விரட்டி பயங்கரமான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய 5 பேர் கொண்ட கொலையாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைநடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கும் அதிகாலை வேளையில், அதுவும் காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர படுகொலை மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-hacked-to-death-in-the-middle-of-the-road-near-a-police-station-in-madurai-after-being-chased-down




