புதுடெல்லி, டெல்லியின் திலக் நகர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது காதலனை டெல்லி போலீசார் சுட்டுப் பிடித்தனர். காதலை மறுத்த காதலி மேற்கு டெல்லியின் திலக் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி முஸ்கான் சர்மா (வயது 21). அவர், பகுதி நேரமாக மாடலிங் மற்றும் பேஷன் கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றி வந்தார். இவரும், ஜிம் டிரெய்னராகப் பணிபுரியும் இம்ரான் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இம்ரானுக்கு இருந்த போதைப்பொருள் பழக்கம் மற்றும் தவறான நடத்தை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முஸ்கான் அவரிடமிருந்து விலக முயன்றுள்ளார். வீட்டிற்குள் புகுந்து கொலை இந்நிலையில், கடந்த (புதன்கிழமை) மாலையில் முஸ்கான் வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட இம்ரான், அங்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கடும் ஆத்திரமடைந்த இம்ரான், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முஸ்கானின் வயிறு மற்றும் பிற பகுதிகளில் பலமுறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ் தகவலறிந்து வந்த திலக் நகர் போலீசார், முஸ்கானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இம்ரானைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் இம்ரானைப் பின்தொடர்ந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை டெல்லியின் புறநகர்ப் பகுதியில் இம்ரான் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இம்ரானை, காலில் சுட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/brutal-murder-of-girlfriend-police-shoot-and-capture-fleeing-boyfriend




