மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஜோடி ஒன்று, காதல் கோட்டை படத்தில் அஜித் - தேவயானி வரும் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் கமலி, சூர்யா என கத்துவதும், சூர்யா சட்டையைக் கழற்றி பனியனில் ரோஜாவிற்கு பதிலாக வாகைப்பூவை வரைந்து அதனை காட்டுவதும் என... ரயிலில் ஏறுவது இருக்கையில் அமருவது பின்னர் பிளாட்பார்மில் ஓடுவது என ரயில்வே நிலையத்தை ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி பார்ப்போரை முகம் சுளிக்க வைத்திருக்கிறார்கள். தற்போது வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது வைரலாகும் ரீல்ஸ் ரயில் நிலையங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பு அல்லது குறும்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுதான் நடத்த முடியும். தற்போது வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவிற்காக அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது போன்று ரயில்களில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிடும் நபர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/trending/viral/recreating-the-kadhal-kottai-climax-the-railway-station-that-is-a-hotspot-for-reels-in-madurai



