நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1,538 காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் பினவருமாறு பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் உதவி & சேல்ஸ்) - மொத்தம் 1,538 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 68 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி போதும் + விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ 01.04.2006 தேதிக்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.24,050 முதல் 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-sbi-1538-vacancies-how-to-apply




