தேனி, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை பகுதியில் முறையான அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் சுற்றுலா விடுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேகமலை பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக வனப்பகுதியாக இருப்பதால், அங்கு முறையான அனுமதியின்றி செயல்பட்ட தனியார் விடுதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 6 தனியார் சொகுசு விடுதிகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும் மேகமலையில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் மற்ற அனைத்து விடுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/revenue-department-takes-swift-action-6-private-resorts-sealed-in-megamalai-following-supreme-court-order




