சென்னை தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்னவென தெளிவாக கூறவில்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது என தகவல்கள் வெளியாகி இருந்தன. தமிழக எம்.பி.க்கள் கூட்டம் இந்த சூழலில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கான அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கலந்தாய்வு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை வகிப்பார். இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. தி.மு.க.-அ.தி.மு.க. புறக்கணிப்பு எனினும், இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகியவை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன. அ.தி.மு.க.வும் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கான அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்ட புறக்கணிப்பு பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் இன்று பேட்டி அளித்துள்ளார். த.வெ.க. நிலைப்பாடு அவர் கூறும்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாக கூறவில்லை. தொகுதி மறுவரையறையில் த.வெ.க.வின் நிலைப்பாடு என்ன என்பதே? எங்களுடைய கேள்வி. அதனை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் த.வெ.க.வின் பார்வை என்ன? இந்த கூட்டத்தின் செயல்பாட்டு திட்டம் என்ன? எதனையும் அவர்கள் கூறவில்லை. மசோதா தோற்கடிப்பு இந்த விவகாரம் பற்றி நாங்கள் ஆலோசிக்க போகிறோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். எங்களிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை. தொகுதி மறுவரையறை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதுபற்றி தெரியாமல் நாங்கள் எப்படி கூட்டத்தில் பங்கேற்க முடியும்? என கேள்வி எழுப்பினார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை நாங்கள் எதிர்த்தோம். அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன் மீதுள்ள எங்களுடைய பார்வையை நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tmcs-stand-on-constituency-redelineation-is-not-clear-dmk-spokesperson-interview




