மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9-ந்தேதி ஜன் ஆஸ்டர் என்ற பெயருடைய பயணிகள் கப்பல் மணிலா நகரில் இருந்து புறப்பட்டு பலவான் மாகாணத்தில் உள்ள கரோன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 76 ஆக உயர்ந்துள்ளது. தப்பியோடிய கப்பல் கேப்டனை போலீசார் தேடி வருகின்றனர். 43 பேர் மீட்பு அலட்சியத்துடன் செயல்பட்டு உள்ளனர் என கேப்டன் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில், 117 பயணிகள் மற்றும் 17 கப்பல் ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் இருந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 43 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. எனினும், தீ விபத்தில் சிக்கி பலரும் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். இதனால், உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/philippines-payanikal-kappalil-bayankara-thi-vibathu-bali-ennikkai-76-aaga-uyarvu




