சென்னை, தமிழகத்துக்கு முதலிடம் அளிப்பவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அனைத்துக்கட்சி கூட்டம் தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்-அமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள். இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல. இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது. தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள், இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/those-who-give-priority-to-tamil-nadu-will-definitely-participate-in-the-all-party-meeting-manickam-thakur




