சென்னை, சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் சிகாகோ எனுமிடத்தில் உரையாற்றினார். இது குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- விவேகானந்தர் உரை 130 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் 1893 செப்டம்பர் 11 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மக்கள் முன் நின்று, “அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற அழியாத வார்த்தைகளுடன் தனது உரையைத் தொடங்கினார். அந்த ஒரு கணத்தில், அவர் இந்தியாவின் ஆன்மீகக் குரலை - கருணை, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நமது நாகரிக ஞானத்தின் காலத்தால் அழியாத செய்தியுடன் உலகிற்கு எடுத்துச் சென்றார். அவரது வார்த்தைகள் இதயங்களை வென்றது மட்டுமல்ல; அவை பாரதத்தின் சனாதனப் பாரம்பரியத்தின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தின. இன்று, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நாம் மிகுந்த பெருமையுடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் நினைவுகூர்கிறோம். நித்திய உத்வேகம் தேசத்திற்கு சேவை செய்யவும், சமூகத்தை வலுப்படுத்தவும், பாரதத்தின் ஞானத்தை மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மாற்றவும் ஒவ்வொரு இந்தியருக்கும் சுவாமி விவேகானந்தர் ஒரு நித்திய உத்வேகமாகத் திகழ்கிறார். "சிகாகோவிலிருந்து உலகிற்கு அவரது குரல் இன்றும் எதிரொலிக்கிறது." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vivekanandas-voice-still-echoes-from-chicago-tamilisai-soundararajan




