நாளை (ஜூலை 20, 2026) முதல் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் சந்திப்பு நடந்தது. ஆனால், ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் - திரிணாமுல் காங்கிரஸ். நாடாளுமன்றம்அயோத்தி அறக்கட்டளை மோசடி: 'குற்றத்திற்கு பிறகு உங்கள் மௌனம்.' - மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம் ஏன். என்ன விஷயம்? கடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அந்தக் கட்சிக்குள் காட்சிகள் மாறி இருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த 20 எம்.பிக்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) சேர்ந்தனர். இது மேற்கு வங்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இந்தக் கட்சியில் இணைந்த பின், இந்தக் கட்சி கவனம் பெற்றது. இதெல்லாம் சரி. இன்று ஏன் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறினார்கள் என்று பார்த்தால், இன்றைய கூட்டத்திற்கு NCPI கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததே எதிர்க்கட்சிகளின் கோபத்திற்கு காரணம். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேசுகையில், NCPI கட்சியில் 20 எம்.பிக்கள் இணைந்திருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காத போது, அந்தக் கட்சி எப்படி அழைக்கப்பட்டது என்று பொறுமுகிறார்கள். டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? - என்ன சொல்லப்படுகிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/opposition-walks-out-of-all-party-meet-over-ncpi-invitation




