பியூனஸ் அயர்ஸ், 23-வது உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது. இதன்மூலம் 64 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை தக்கவைக்கும் அர்ஜென்டினாவின் கனவு கலைந்தது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான 39 வயதான லயோனல் மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்ற போதிலும் அவர் சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் ஓய்வு முடிவை தள்ளிப்போட்டுள்ள மெஸ்சி, மேலும் சில மாதங்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடிவு செய்திருப்பதாகவும், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் பிரிவுபசார போட்டியில் விளையாடி விடைபெற விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அர்ஜென்டினா அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் நிகோலஸ் ஒட்டமென்டி தனது 17 ஆண்டு கால சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். அர்ஜென்டினா அணியின் முக்கிய தூணாக விளங்கிய 38 வயதான ஒட்டமென்டி தேசிய அணிக்காக 139 ஆட்டங்களில் விளையாடி 8 கோல் அடித்துள்ளார். 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/messi-wants-to-bid-farewell-in-front-of-the-fans




