பிறந்த குழந்தைகளுக்கு பேசத் தெரியாததால், அழுகையின் மூலமே தங்களின் தேவைகளை வெளிப்படுத்துகின்றன. ஆரம்பத்தில் பெற்றோருக்கு இதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருந்தாலும், நாளடைவில் குழந்தையின் அழுகைக்கான காரணத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும். பசி என்பது குழந்தைகள் அழுவதற்கான முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் தாய்ப்பால் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த உணவை கொடுத்தால் குழந்தை விரைவாக அமைதியாகும். சில குழந்தைகள் ஈரமான டயப்பர், அதிக வெப்பம் அல்லது குளிர், இறுக்கமான உடை போன்ற அசௌகரியங்களாலும் அழுகின்றன. குழந்தை வசதியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் அடிக்கடி கவனிக்க வேண்டும். தூக்கம் வரும்போதோ அல்லது அதிக சோர்வாக இருந்தாலோ குழந்தைகள் அழக்கூடும். மெதுவாக தாலாட்டு பாடுவது, கையில் தூக்கி ஆட்டுவது அல்லது அமைதியான சூழலை ஏற்படுத்துவது உதவியாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் அரவணைப்பையும் பாதுகாப்பு உணர்வையும் விரும்பி அழுகின்றன. பெற்றோர் குழந்தையை அணைத்துப் பேசினால் அல்லது மெதுவாகத் தட்டிக் கொடுத்தால் அது அமைதியாகும். வயிற்றுவலி, வாயுத் தொல்லை அல்லது செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் குழந்தைகள் தொடர்ந்து அழலாம். பால் குடித்த பிறகு தோளில் சாய்த்து ஏப்பம் வரச் செய்வது இந்த பிரச்சினையை குறைக்க உதவும். குழந்தைக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாச சிரமம், பால் குடிக்க மறுப்பது அல்லது நீண்ட நேரம் அடங்காமல் அழுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், அது உடல்நலக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் குழந்தையை குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் முக்கியமானது. சாப்பிட்ட பிறகு சோம்பு, பீடா சாப்பிடலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/why-newborn-baby-cries-how-to-calm




