Volledig artikel
2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 2022ம் ஆண்டு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா இரண்டாக உடைந்தது. அதன் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து உத்தவ் தாக்கரே மீள்வதற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 6 எம்.பி.க்கள் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்துவிட்டனர். இதையடுத்து அந்த 6 எம்.பி.க்களின் தொகுதிகளில் இப்போது உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். புதிய திருப்பமாக உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் தங்களது கட்சியில் சேர இருப்பதாக சிவசேனா(ஷிண்டே) கட்சியை சேர்ந்த அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் தெரிவித்து இருந்தார். ஏக்நாத் ஷிண்டே இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "சிறிது காலம் காத்திருங்கள், 14-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் (ஷிண்டேவிடம்) வருவார்கள். ஏக்நாத் ஷிண்டே பேசுவதில்லை, அவர் தனது தாடியின் மீது கைகளால் மட்டுமே தடவுவார். இதை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவே ஒப்புக்கொண்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே தனது தாடியின் மீது கைகளைத் தடவும்போது, 'ஆபரேஷன் டைகர்' வெற்றி பெற்றதாக அர்த்தம்," என்று பாட்டீல் கூறினார். ஆனால் இதனை சிவசேனாவின் மற்றொரு அமைச்சரான உதய் சாமந்த் மறுத்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதய் சாமந்த், அத்தகைய நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். அதேசமயம் மகாவிகாஷ் அகாடியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மொத்தமுள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கிடையே மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் வதேட்டிவார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேரப்போவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. விஜய் வதேட்டிவார் இது குறித்து சிவசேனா அமைச்சர் உதய் சாமந்த் கூறுகையில்,''விஜய் வடேட்டிவார் எங்கள் மிகச் சிறந்த நண்பர். அவர் ஏக்நாத் ஷிண்டேயின் நெருங்கிய நண்பரும் கூட. அவர் எங்களுடன் இணைவது குறித்து வதேட்டிவார் ஒருபோதும் பேசியதில்லை. ஆனால், விதர்பாவைச் சேர்ந்த அவரைப் போன்ற ஒரு செல்வாக்குமிக்க தலைவர் ஷிண்டேவுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏக்நாத் ஷிண்டே தலைமையேற்க ஏற்க வேண்டும் என்று மகாவிகாஷ் அகாடி எம்.எல்.ஏ.க்களே விரும்பினால், அதை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்? அவர்கள் கட்சியில் இணைய முன்வந்தால், வர வேண்டாம் என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்?" என்றும் அவர் கூறினார். ஆனால் இதனை விஜய் வதேட்டிவார் கடுமையாக மறுத்துள்ளார். வதேட்டிவார் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார். அதில்,"அவதூறு பரப்பும் அரசியலை நிறுத்துங்கள். நான் காங்கிரஸின் விசுவாசமான தொண்டன். கட்சி வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் நேர்மையுடன் நிறைவேற்றியுள்ளேன். மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறேன்."என்று குறிப்பிட்டுள்ளார். சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிபா தனோர்கருடன், விஜய் வதேட்டிவாருக்கு கட்சிக்குள் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. சந்திரபூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்பது குறித்த இவர்களின் மோதல் பொதுவெளியிலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவே வதேட்டிவார் சிவசேனாசேனாவில் இணையக்கூடும் என்ற வதந்திகளுக்கு காரணமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



