Volledig artikel
திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. துரை வைகோ இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருக்கின்றனர். எனவே இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக தவெக 65 % வாக்குகளைப் பெறும். முதலமைச்சர் விஜய் அவ்வளவாகப் பேசவில்லை என்றாலும் செயல்படும் முதலமைச்சராக இருக்கின்றார். அதுதான் மிக முக்கியமான விஷயம். என்னுடைய திருச்சி தொகுதிக்கு உட்பட்ட மெட்ரோ ரயில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தேன். துரை வைகோ அடுத்த நாளே அதிகாரிகள் என்னைக் கூப்பிடுகின்றனர். ஒரு செயல்படும் அரசைப் பார்க்கிறேன். ஒரு செயல்படும் அமைச்சரவையைப் பார்க்கிறேன். ஒரு செயல்படும் முதல்வரைப் பார்க்கிறேன். செயல்படும் முதல்வராக இருக்கும் விஜய்க்கு நன்றி" என்று பாராட்டி பேசியிருக்கிறார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்; சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு| Live Updates முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder




