விருதுநகர், சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். வெடிவிபத்தில் 3 பேர் பலி பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீயை அணைக்கும் பணி தீவிரம் வெடி விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலை தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிக்கியுள்ளவர்களை தேடும் பணி வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையின் உள்ளே மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-firecracker-factory-explosion-near-sivakasi-3-dead




