புதுடெல்லி, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை (Rifle/Pistol/Shotgun) தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஈஷா சிங் தங்கப்பதக்கத்தையும், மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கலவையான உணர்வுகள் உள்ளது. முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது எனக்குக் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. எனது செயல்திறனை மேம்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில், நான் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்,என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/i-should-have-played-even-better-manu-bhaker




