சென்னை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைவு செய்துள்ளார். ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தொடர்ந்து ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும், இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியான வெற்றியை பெறாததால், பாக்யஸ்ரீ பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான ‘லெனின்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் அவரது திரைப்பயணத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ‘சேயோன்’ படத்தில் கதாநாயகி ‘லெனின்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேஷன் இப்படத்தை இயக்கி வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஷூட்டிங்கை முடித்த பாக்யஸ்ரீ மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைவு செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘சேயோன்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-bhagyashree-borse-wraps-up-shooting-for-the-film-seyon




