கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். வாய்த்தகராறு கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிசாமி (வயது 28). இவருக்கும் சிறுவங்கூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(33) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அந்தோணிசாமியைத் தாக்கியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், நேற்று அதிகாலை தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தோணிசாமியின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். இதில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-petrol-bomb-thrown-at-workers-house-4-arrested




