கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது நிலவி வரும் கடுமையான வெயிலின் காரணமாக, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறி, விளைநிலங்கள் மற்றும் கிராமப்புற குட்டைகளை நோக்கி வரத்தொடங்கியுள்ளன. குட்டையில் குளித்த யானைகள் இந்த நிலையில், வனப்பகுதியையொட்டி உள்ள பஜனகிரி பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் குட்டைக்கு நேற்று மாலை திடீரென 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. தண்ணீரை கண்டதும் மகிழ்ச்சியில் பிளிறிய யானைகள், சட்டென்று குட்டைக்குள் இறங்கின. பின்னர், தங்களது தும்பிக்கையால் தண்ணீரை அள்ளி உடம்பில் ஊற்றி, நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டன. குட்டி யானைகள் தண்ணீரில் ஒன்றோடொன்று விளையாடி மகிழ்ந்தன. பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர் யானைகள் குட்டையில் குளிக்கும் தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் பாதுகாப்பு தூரத்தில் நின்றுகொண்டு, யானைகளின் இந்த ஆனந்த குளியலை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது செல்போன்களிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டனர். வனத்துறை எச்சரிக்கை இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களை யானைகள் அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் விளையாடிய காட்டு யானைகள், வெயில் தாக்கம் குறைந்த பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/heatwave-elephants-enjoy-bath-bajanagiri-pond




