ஈரானில் வருகிற ஜூலை 9-ம் தேதி வரை உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசும் போது, "கச்சா எண்ணெய் விலையானது நாம் இந்தப் போரைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரலுக்கு என்ன விலை இருந்ததோ, அதைவிடக் குறைவான நிலைக்கு இப்போது வந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்கொலம்பஸுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு முன்னும். 250 வயது சுதந்திர அமெரிக்காவின் வரலாறு என்ன? ஈரானில் அணு ஆயுதத்திற்கு இடமில்லை. 'அணு உறைதுகள்' (Nuclear dust) என்று அழைக்கும் அந்தச் செறிவூட்டப்பட்டப் பொருட்களை நாம் கைப்பற்றப் போகிறோம். நான் இதில் இவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு ஒரே ஒரு வலுவான காரணம்தான் இருக்கிறது. அது, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான். நான் அங்கு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் உண்மையில் அங்கு ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. முதல் ஆட்சி போய்விட்டது, இரண்டாவது ஆட்சியும் போய்விட்டது. இப்போது இருக்கும் மூன்றாவது ஆட்சி கொஞ்சம் பகுத்தறிவுடன் நடக்கும் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். நாம் எப்படியும் ஒரு வழியில் வெற்றி பெறத்தான் போகிறோம். ஒன்று, நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம் அல்லது இந்தப் போரை முழுமையாக முடிப்போம், அவ்வளவுதான். இந்தப் போரை முடிப்பது ஒன்றும் நமக்குக் கடினமான காரியம் அல்ல. ஆனால், அங்கிருக்கும் 91 மில்லியன் (9.1 கோடி) மக்களைப் பாதிக்க நான் விரும்பவில்லை என்பதால், ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளவே நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். 'ஏவுகணைகளை தாருங்கள்; கிடங்குகளில் இருப்பதால் பயன் இல்லை' - உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/trump-warns-iran-repeats-no-nuclear-weapons-stand




