சென்னை, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே வாரியம் வழங்குகிறது. அதன்படி, தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதாவது, நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. விற்று தீர்ந்தன அதன்படி பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இந்நிலையில், டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் தென்மாவட்ட ரெயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற தேதிகளுக்கான முன்பதிவு நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-bookings-tickets-sold-out-within-minutes




