கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே டெல்லி விமான நிலையம் முன் நேற்று ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் தேவையில்லாத எதையும் செய்யக்கூ டாது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர்கள். ஜூலை 20-ந்தேதி அவர்கள் ரத்தம் சிந்திய பிறகும் அர சாங்கத்தின் பேராசை தீரவில்லை என்றால், அவர்கள் தொடர்ந்து மாணவர்களை இப்படி துன்புறுத்தினால், நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்குவோம். அதை விரைவில் செய்வோம். மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக் கிகளை பயன்படுத்தி, அவர்களை பயங்கரவாதிகள் போல நடத்துவதா? இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் நாடு முழுவதும் மீண்டும் வீதிகளில் இறங்குவோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/if-students-are-harassed-we-will-take-to-the-streets-again-abhijit-deepke




