Full artikkel
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குபவர்கள் எனக் குறிப்பிட்டது. ஆட்சியரிடம் விளக்கம் கேட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி அதன் கீழ் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. விழா மேடைக்கு வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் என்னுடைய பெயர்தானே முதலில் இருக்க வேண்டும். ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்? நிகழ்ச்சிக்கே வராத அமைச்சரின் பெயரை முதலில் போட்டுள்ளீர்கள். ப்ரோட்டாகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் இதே தவறை செய்து வருகிறார்கள். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவா அல்லது எழுந்து செல்லட்டுமா” என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. கேஎள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரோ ”இனி இப்படி நடக்காது மேடம்” எனச் சொல்லி சமாதானம் செய்தார். ”இந்த மாதிரியான போக்கினை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் கொந்தளிப்பில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சொந்த கட்சியின் அமைச்சரின் பெயர் முதலில் இடம்பெறுவது கூட இன்னொரு அமைச்சருக்கு பிடிக்கவில்லையா என தவெக தொண்டர்கள் அப்செட்.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




