சென்னை, கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுத்திருக்கும் முடிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள் பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வேறுபாடு இன்றி ஆலோசனை இன்று காலை 6:30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திலிருந்து நேரில் வந்த இந்த அதிகாரப்பூர்வ அழைப்பிற்கு எனது நன்றிகள். கடந்த 12 ஆண்டுகளில் 5 முதல்-அமைச்சர்களை எம்பியாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், முதல்முறையாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் அழைத்து, கட்சி வேறுபாடு இன்றி ஆலோசனை நடத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடுத்திருக்கும் இந்த சிறப்புமிக்க முடிவை வெகுவாகப் பாராட்டுகிறேன். நல்ல மரபு தொடரட்டும்! மத்திய பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்நாடு ஒரே குரலாக டெல்லியில் ஒலிக்க அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன், அழைப்பு இந்த நல்ல மரபு தொடரட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/consultation-across-party-lines-manickam-tagore-praises-chief-ministers-move




