நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தலாம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்திருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதனை ஏற்க மறுத்துள்ளார். மாணவர்கள் மிது பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி தாக்க உத்தரவிட்டது யார்? என்பது குறித்து நேரடி பதில்தான் எங்களுக்கு தேவையே தவிர உரைகள் தேவையில்லை என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/parliaments-monsoon-session-concludes-today




