சென்னை, தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற தவெக அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வதா என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்ததாவது:- மாணவர் தமிழ்ச்செல்வன் நேற்றைய தினம் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டு போராடியவர்களை கடுமையாக தாக்கி கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில் இரட்டை கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது. திறனற்ற அரசு? குற்றவாளிகளை ஒடுக்க சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்த திறனற்ற அரசு? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-it-right-to-arrest-victims-fighting-for-justice




