திண்டுக்கல், 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ராம் குமார் 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சித்தார்த் மகாதேவன் 60 ரன்களில் போல்ட் ஆனார். கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-madurai-sets-a-target-of-196-runs-for-the-salem-team




