நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதிகா, ராஜ் கண்ணன், போஜன் ஆகியோர். கோவை மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். உறவினரின் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எடக்காடு கிராமத்திற்கு நேற்று காரில் மூவரும் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு கெத்தை மலைப்பாதை வழியாக மீண்டும் மத்தம்பாளையம் நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் பயணித்த கார் முள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்திருக்கிறது. பள்ளத்தில் கவிழ்ந்த கார் பல அடி பள்ளத்தில் கவிழ்ந்தால் காரில் இருந்த மூவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோரமான விபத்தைக் கண்ட சக வாகன ஓட்டுநர்கள், வனத்துறையினர், காவல்துறையினர் என களத்தில் இறங்கி மூன்று பேரின் உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 3 பேரும் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/accidents/ooty-car-accident-update




