திருச்சி, திருவனந்தபுரம் தாம்பரம் இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு வாராந்தோறும் புதன்கிழமை இயக்கப்பட்டு வரும் திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06110) வருகிற 23, 30 மற்றும் அடுத்த மாதம் 7, 14, 21, 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வாராந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06109) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-thiruvananthapuramtambaram-special-train-service



