சென்னை, சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வேதனை முன்னாள் பேராசிரியரும்,புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும்,தமிழ் பேச்சுலகின் தனித்துவமான ஆளுமையுமான சாலமன் பாப்பையா காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பெருமை அவருக்கு உண்டு தமிழ் மொழியின் சிறப்பையும்,இலக்கியத்தின் அழகையும் எளிமையான நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு. பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான நடுவர் பாணியால் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர். பங்களிப்பு தமிழ் மொழிக்கும்,தமிழ் பேச்சுக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழக அரசின் 'கலைமாமணி' விருது மற்றும் மத்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது பெற்ற அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கும்,கலை மற்றும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். இரங்கல் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,உறவினர்கள், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/india-tawheed-jamaat-mourns-salomon-pappaiya




