செங்கல்பட்டு, சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், தவெக முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ ஆதாரம் சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகை பில்லை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வீராசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். முன்னாள் நிர்வாகி கைது இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீராசாமியை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-130-lakh-bribery-complaint-former-tvk-functionary-veerasamy-arrested




