ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர்(SIR)-ன் ஒரு பகுதியாக, திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜமவுலி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் ஐதராபாத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு, வெங்கடேஷ், நடிகை சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கும் தேர்தல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணம்? வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில விவரங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது, பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களுடன் தற்போதைய வாக்காளர் பட்டியல் தகவல்களை இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. எஸ்ஐஆர் பணியின் ஒரு பகுதியாக நடவடிக்கை தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, அதில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் விவரங்களில் சந்தேகம் அல்லது முரண்பாடு காணப்படும் நபர்களிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/election-commission-issues-notices-to-film-personalities-including-mahesh-babu-and-samantha



