திருவனந்தபுரம், கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யும் புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை விரிவான மருத்துவ பரிசோதனை கேரள மாநிலத்தில் உள்ள 33 ஆயிரத்து 120 அங்கன்வாடிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை கேரள அரசு இன்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 'பால்ய ஸ்பந்தனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி குழந்தைகள் பலன் அடைவார்கள். அவர்களுக்கு நோய் அறிகுறிகளை மட்டுமின்றி, உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலவரம், கண்பார்வை, காது கேட்கும் திறன் ஆகியவற்றை சுகாதார பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஏதேனும் குறைபாடுகளுக்கான அறிகுறி தெரிந்தால், முன்கூட்டியே கண்டறிந்து நிபுணர்களின் சிகிச்சைக்கு பரிந்துரைப்பார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/medical-check-up-every-3-months-for-anganwadi-children-in-kerala




