மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.1) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பாஜக-வின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான். ராகுல் காந்தி தமிழக மக்களின் வாக்குகளைப் பறிக்கும் அதிகாரத்தை சதித் திட்டத்துடனேயே தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது பாஜக. தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பர்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்தான். ராகுல் காந்தி எந்த ஒரு தமிழரும் தொகுதி மறுவரையறை ஆதரிக்கக் கூடாது. ஒவ்வொரு தமிழரும் தொகுதி மறுவரையை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் தேசியக் கட்சியும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார். "இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/rahul-gandhi-about-delimitation-in-tamilnadu



