பிலடெல்பியா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பராகுவே-பிரான்ஸ் இடையேயான போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று போட்டிகள் (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். பரபரப்பான போட்டி அந்த வகையில், அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பராகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. எனினும், கோல் கீப்பர்கள் கோல் அடிக்க விடவில்லை. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-no-goals-scored-in-first-half-of-paraguay-france-match




