கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியாவது முதலமைச்சரின் கரூர் பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சி.பி.ஐ விசாரணை குறித்துப் பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர் கூட முழுமையாகப் படிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர். நிர்மல் குமார் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்குத் தமிழக மக்கள் அவர்களைப் புறக்கணித்து, எங்களை ஆதரித்து வருகிறார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர் தலைமையில் விரைவில் அடுத்தகட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.” எனத் தெரிவித்தார். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை; உதவிக்கரம் நீட்டிய தவெக எம்.எல்.ஏ! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/minister-nirmalkumar-predicts-that-the-dmk-and-admk-will-soon-face-a-situation-where-they-are-left-without-any-members




