சென்னை, கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலிருந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாஸ்போர்ட் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் 25.08.2026 அன்று பாஸ்போர்ட் குறைதீர்ப்புமுகாம் நடைபெறஉள்ளது. நடவடிக்கை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். விஜயகுமார்.ஐ.எப்.எஸ், அவர்களும் அவரது குழுவினரும் விண்ணப்பதாரர்களுடன் நேரில் கலந்துரையாடி, நீண்ட காலமாக நிலுவையில் 861161டி விண்ணப்பங்கள் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மின்னஞ்சல் முகவரி மேற்கண்ட அதாலத்தில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது கோப்பு எண்ணுடன், தங்களது பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களை விளக்கும் கடிதத்தையும் இணைத்து, 22.08.2026 அல்லது அதற்கு முன்பாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். rpo.chennai@cpo.gov.in சிறப்பு பாஸ்போர்ட் குறைதீர்ப்பு விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம் முயற்சியை முழுமையாக பயன்படுத்தி கொண்டு, தங்களது விவரங்களை விரைவாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பாஸ்போர்ட் சேவை இந்த முயற்சியின் நோக்கம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாக தீர்த்து வைப்பதுடன், விண்ணப்பதாரர்களுக்கு துரிதமான பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/passport-grievance-camp-in-chennai-on-25th




