சென்னை, சட்டசபையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் பேசியதாவது:- இடஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் சென்றது. பெரியார் வழியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அணுகுமுறையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சமூகத்தினருக்கும் விகிதாசார இடப்பங்கீடு உறுதி செய்து, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது இந்த அரசின் அடிப்படை கொள்கை ஆகும். இதனை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு, நம்முடைய அரசு சமூகநீதி கணக்காய்வை நடத்தும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-to-conduct-social-justice-audit-minister-sampath-kumar-informs




