புதுடெல்லி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மிகவும் சக்தி வாய்ந்த ‘கோப்ரா’ கமாண்டோ படை பிரிவின் புதிய ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம், அடர்ந்த காடுகளுக்குள் புகுந்து நக்சலைட்டுகளை வேட்டையாடும் இந்த சிறப்பு படைக்கு தலைமை தாங்கும் முதல் பெண் ஐ.ஜி. என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இரும்பு பெண்மணி அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுக்தா பராசர், 2006-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அசாமில் போடோ தீவிரவாதிகளுக்கு எதிராக களம் இறங்கி, கையில் துப்பாக்கியை ஏந்தி, நள்ளிரவிலும் காடுகளுக்குள் புகுந்து துப்பாக்கி சண்டை நடத்தியவர். பல பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழித்தவர். இவரது இந்த ஆக்ரோஷமான ஆபரேஷன்களைக் கண்டு, வடமாநில மக்கள் இவரை ‘அசாமின் இரும்பு பெண்மணி’ என்று பயபக்தியோடு அழைக்கிறார்கள். தேசிய புலனாய்வு தேசிய புலனாய்வு முகமையிலும் உயர் பதவியில் பணியாற்றி தேச பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார். தற்போது கோப்ரா பிரிவின் ஐ.ஜி.யாக இருந்த தனேஷ் ராணாவுக்கு பதிலாக, சஞ்சுக்தா பராசர் இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். கோப்ரா ‘கோப்ரா’இந்தியாவில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை வேரோடு ஒடுக்க, கடந்த 2008-09 ஆம் ஆண்டில் ‘கோப்ரா’ என்ற சிறப்பு கமாண்டோ படை உருவாக்கப்பட்டது. காடுகளுக்குள் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்முறையில் இந்த படை வீரர்கள் கைதேர்ந்தவர்கள். முதன்முறை பெண் அதிகாரி தற்போது சத்தீஸ்கர், ஜார்கண்ட் காடுகளிலும் மற்றும் பதற்றம் நிலவி வரும் மணிப்பூரிலும் கோப்ரா படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய ஆபத்துகள் நிறைந்த, ஆக்ரோஷமான கமாண்டோ படைப்பிரிவுக்கு, முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்குவது இந்திய காவல் துறை வரலாற்றில் ஒரு பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/first-woman-ig-for-cobra-commando-force-ips-officer-sanjukta-parashar-takes-charge




