கொடைக்கானல், மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற அரிய வகை தாவரமான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது ஆங்காங்கே பூக்கத் தொடங்கியுள்ளன. நீலக்குறிஞ்சி மலர்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பசுமையான புல்வெளிகளும், எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள பல்வேறு வனப்பகுதிகளிலும், மலைச் சரிவுகளிலும் இயற்கை எழிலோடு வளர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அரிய வகை மலர்கள், தற்போது மலை பிரதேசங்களை நீல நிற பாயாக மாற்றி, காண்போரை கண் கவர செய்யும் வகையில் இயற்கை அன்னைக்கு அழகூட்டி வருகின்றன. பயணிகள் மகிழ்ச்சி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதை காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். மலையெங்கும் நீலப்போர்வை போர்த்தியது போலக் காட்சியளிக்கும் இந்த அற்புத இயற்கை நிகழ்வை, சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கண்டு ரசித்து, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் கொடைக்கானலின் முக்கியப் சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது பயணிகளின் கூட்டத்தால் களைகட்டதொடங்கியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rare-neelakurinji-flowers-carpet-kodaikanal-hills




