* வெங்காயம் அதிகமாக இருந்தால், அதை கடலை மாவில் உருட்டிப் பொரித்து சாம்பாரில் போடலாம். * சாம்பாரில் சுண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பு, அதை எண்ணெயில் வதக்கினால் கசப்பு சற்று குறையும். * நெய் சாதத்தில் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால், நறுமணமும் சுவையும் கூடும். * பச்சை மிளகாய் நறுக்கும்போது கைகளில் எரிச்சல் ஏற்பட்டால், எலுமிச்சைச் சாறில் கைகளை கழுவலாம். * பூண்டு விழுதை பழுப்பு நிறமாகும் வரை வதக்கினால், அதன் பச்சை வாசனை போய்விடும். * குழம்புக்கு புளி கரைக்கும்போது, கெட்டியான புளிக் கரைசலை அதிகமாகச் சேர்க்கக் கூடாது. இல்லையெனில் குழம்பு அதிகம் புளித்துவிடும். * குழம்பில் வெண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பு, அதை எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். * வெங்காயம் சீக்கிரமாக வதங்க, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கலாம். பூரியுடன் சாப்பிட சூப்பரான கிழங்கு மசாலா! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/samaiyalai-elithakkum-sinna-sinna-tips-idho-ungalukkaga




