மான்செஸ்டர், மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இருப்பினும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இலங்கை அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இலங்கை அணியில் பதும் நிசாங்கா 36 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 35 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறினர். இதனால் இலங்கை அணியின் ரன் வேகம் தொடர்ந்து குறைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி இறுதியில் 20 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை ஜோஸ் பட்லர் துவம்சம் செய்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். இதனால் 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 126 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 எனதொடரையும் கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/england-defeats-sri-lanka-to-win-the-series




