திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் கலந்துகொள்ள, ஆந்திர மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்குத் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 9 நாட் கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரம்மோற்சவ அழைப்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் பங்கேற்பதற்காக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டம் பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/tiruppati-brahmotsava-festival-invitation-to-chandrababu-naidu




