சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.24) கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், "ஒருகாலத்தில் ஒரு குடும்பத்தில் படித்தவர்கள், பட்டதாரிகள் அத்திப்பூ பூத்தார் போல் இருப்பார்கள். ஆனால் தற்போது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சி இந்த நிலைமை வருவதற்கு யார் காரணம் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இன்று மிகப்பெரிய ஏமாற்றமாக மாறி இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர். அது கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் வருங்காலத்தில் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்" என்று தவெக-வை ஸ்டாலின் சாடியிருக்கிறார். "கட்சி வேறுபாடின்றி பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன."- எம்.பி கனிமொழி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/dmk-leader-stalin-slams-tvk



