மதுரை, 'தமிழக கோவில்களில் பாதுகாக்கப்பட்ட மன்னர் கால கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய, 1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகளை, 'டிஜிட்டலைசேசன்' எனப் படும். மின்பதிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக இந்து சமய அற நிலையத்துறை சார்பில், கோவில்களில் உள்ளஅரிய ஓலைச்சுவடிகளை, வருங்கால தலைமுறையினர் எளிதில் அறிந்து கொள்ள, அவற்றை மின்பதிவாக்கம் செய்து, தற்கால தமிழுக்கு ஏற்ப, மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சுவடிகள், வெற்றிகரமாக மின்பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளன செய்யப்பட்டதில், 73 கோவில்களில், 1.69 லட்சம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், செப்பேடு கள் மற்றும் செப்பு பட்டயங்கள் 82; தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் ஐம்பொன் ஏடுகள் 9; தாள் சுவடிகள், 13 என்ற எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றுள்ளன. சேகரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில் இதுவரை, 80,000 சுவடகள் கள் சுத்திக முறையில் பராமரிக்கப்பட்டு ரிக்கப்பட்டு, அறிவியல் பட்டுள்ளன. மீதமுள்ள சுவடிகளை பாதுகாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/digitization-of-169-lakh-rare-palm-leaf-manuscripts-begins




